×

லிப்ட் தருவதாக டூவீலரில் ஏற்றி சென்று நைட்டி அணிவித்து வாலிபரை தாக்கி ஓரினச்சேர்க்கை: ரவுடி கும்பல் கைது


சமயபுரம்: திருச்சி அருகே லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அழைத்து சென்று வாலிபரை தாக்கி நைட்டி அணிவித்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட ரவுடி பாட்டில் மணி கூட்டாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் வினோத் (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது நண்பரின் தம்பி கங்குலி (20,பெயர் மாற்றப்பட்டுள்ளது) விபத்தில் சிக்கி காயமடைந்ததால் திருச்சி சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் இவரை பார்த்து விட்டு வினோத் அந்த மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் திருச்சி செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது டூவீலரில் வந்த வாலிபர், வினோத்திடம் தனது பெயரை வசந்த்(24) என அறிமுகப்படுத்தி கொண்டு, தானும் திருச்சி செல்வதாகக் கூறி ஏற்றிச் சென்றார். பின்னர் இருங்களூர் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீட்டுக்கு அவரை அழைத்து சென்றார். அங்கு கஞ்சா, மதுபோதையில் இருந்த கவியரசன்(23), யுவராஜ்(22), ரவி போஸ்கோ(22) மற்றும் அய்யனார்(24) ஆகியோர் ஓரின சேர்க்கையில் ஈடுபடும்படி வினோத்தை கட்டாயப்படுத்தி உள்ளனர். அதற்கு மறுக்கவே ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஆயுதங்களால் வினோத்தை தாக்கினர். தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக கழிவறைக்கு அழைத்து சென்று, நிர்வாணமாக்கி, சேலை மற்றும் நைட்டி கட்டச் சொல்லி 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை விடியோ எடுத்துள்ளனர்.

மேலும் வினோத் வைத்திருந்த செல்போன், ₹1,100 பறித்து கொண்ட அந்த கும்பல், இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். பின்னர் வசந்த் தனது டூவீலரில் வினோத்தை ஏற்றி சென்று திருச்சி மெயின் ரோட்டில் இறக்கி விட்டு தப்பி சென்றார். வினோத் அளித்த புகாரின்படி திருச்சி போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரையும் அன்றே கைது செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் ரவுடி பாட்டில் மணியின் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post லிப்ட் தருவதாக டூவீலரில் ஏற்றி சென்று நைட்டி அணிவித்து வாலிபரை தாக்கி ஓரினச்சேர்க்கை: ரவுடி கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Samayapuram ,Trichy ,
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...